உள்ளூர் செய்திகள் (District)

செல்லம்மாள் 

திருவட்டார் அருகே மூதாட்டி மாயம்

Published On 2022-10-22 07:25 GMT   |   Update On 2022-10-22 07:25 GMT
  • கடந்த 19-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே போனவர் வீடு திரும்பவில்லை.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செல்லம்மாளை தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே முண்டப்பிலாவிளை, புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் அசோகன் இவருக்கு ரமணி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.மனைவியின் தாயார் செல்லம்மாள் (வயது 72) என்பவரும் இவர்களுடன் வசித்து வந்தார். செல்லம்மாள் தன் மகளின் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி அந்த பகுதியில் வெளியே சென்றுவிட்டு வருவது வழக்கம்,

அதேபோல் கடந்த 19-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே போனவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. உடனே செல்லம்மாளின் மகள் ரமணி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். உற்றார், உறவினர்கள் வீடுகளிலும் தேடி பார்த்து எங்கேயும் காணவில்லை. உடனே திருவட்டார் போலீசில் ரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செல்லம்மாளை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News