உள்ளூர் செய்திகள்
திருவட்டார் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
- மது அருந்திய நிலையில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
- திருவட்டார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் வலியவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 61), தொழிலாளி.
இவர், தினமும் மது அருந்தி விட்டு உப்புக்குளம் பகுதியில் உள்ள கிணற்று அருகே அமர்ந்திருப்பது வழக்கம்.
கடந்த 2 நாட்களாக இவர் திடீரென மாயமானார். உறவினர்கள் தேடியபோது கிணற்றுக்குள் ஜாண்சன் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.
அவர், மது அருந்தியநிலையில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
திருவட்டார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.