உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

Published On 2022-07-08 10:27 GMT   |   Update On 2022-07-08 10:27 GMT
  • கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை
  • கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழு வதும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

வடசேரி சப்- இன்ஸ் பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் வடசேரி பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு சந்தேகப்படியாக நின்ற கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்த அஜித்ராஜ் (வயது 20) ஏன்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அஜித்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News