உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே 2 திருமணம் செய்தவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-08-27 07:53 GMT   |   Update On 2022-08-27 07:53 GMT
  • வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
  • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

இரணியல் அருகே குளுமைக்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 64) இவருக்கு மரியபுஷ்பம் (55) என்ற மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக சுமார் இருபது வருடங்களாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரீவை குண்டம் பகுதியை சேர்ந்த உறவினர் செல்வி (52) என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு சிபில் (21) என்ற மகன் உள்ளார். சிவபெருமாளுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் அவர் உடல்நலம் சரியில்லாமல் அவதி பட்டார். அதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இது குறித்து அவரது மகன் சிபில் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News