நாகர்கோவில், திருவனந்தபுரம் ரெயில் நிலையங்களில் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு
- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- மலிவு விலையில் 200 மில்லி குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளது.
நாகர்கோவில் :
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதா வது:-
ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. டிபன், மதிய உணவு உள்ளிட் டவை வெளி இடங்களை விட குறைவான விலைக்கு விற்கப்படுகிறது. சில வகை உணவுகளுக்கு மட்டும் விலை குறைக் கப்படாமல் அதற்கோற்ற விலையை ஐ.ஆர்.சி.டி.சி. வசூலித்து வருகின்றது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் உள்ள நாகர்கோவில், திருவனந்த புரம் உள்ளிட்ட 7 ரெயில் நிலையங்களில் 2-ம் வகுப்பு மற்றும் முன்பதிவு செய்யப் படாத சாதாரண பெட்டியில் பயணம் செய்கின்ற பயணி களுக்கு குறைந்த விலையில் உணவு மற்றும் குடிநீர் வழங்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இதற்கான 2-வகை உணவுகள் பின்வருமாறு:-
முதல் வகை உணவு 7 பூரி, உலர் பருப்பு, கூட்டு, ஊறுகாய் ஆகியவற்றிற்கு ரூ.20 நிர்ணயிக்கப் பட்டுள்ளன. மேலும் 2-வது வகை உணவாக அரிசி சாதம், சிவப்பு காராமணி, மசால் பூரி, கிச்சடி, மசால் தோசை ஆகிய தென் இந்திய உணவு வகைகள் ரூ.50-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் மலிவு விலையில் 200 மில்லி குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளது.
சாதாரணப்பெட்டி பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில் ரெயில் நிலையங்களில் வசதி செய்யப்பட உள்ளது.
முன்பதிவு செய்யப்ப டாத பெட்டிகள் ரெயில் நிலை யத்தில் வந்து நிற்பதற்கு ஏற்ப நடை மேடைகள் சீர மைக்கப்பட உள்ளன. இந்த உணவு கவுண்டர்கள் சோதனை அடிப்படையில் 6 மாதம் செயல்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.