உள்ளூர் செய்திகள் (District)

மணவாளக்குறிச்சியில் மீனவர்கள் கோரிக்கைகள் விளக்க கூட்டம்

Published On 2022-06-13 07:02 GMT   |   Update On 2022-06-13 07:02 GMT
  • ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் மீன்வள திருத்த மசோதா
  • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி :

குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) மற்றும்ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் மீன்வள திருத்த மசோதா மற்றும் சாகர்மாலா திட்டம் ஆகியவற்றை கைவிட கேட்பது, மீனவர் குடியிருப்புகளுக்கு நிபந்தனையின்றி பட்டா வழங்க கேட்பது, கடலில் மாயமாகும் மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்க உரிய ஆணைய திட்டம் உருவாக்கிட கேட்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18 ம் தேதி திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.முன்னதாக மீனவர் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் மணவாளக்குறிச்சியில் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் நடந்தது.

மாநில குழு உறுப்பினர் சுசீலா, மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ், அய்பா தலைவர் கார்மல், ஏ.ஐ.சி.சி.டி.யு.மாவட்ட பொதுச்செயலாளர் அய்யப்பன், லெனினிஸ்ட் கடற்கரை பகுதி செயலாளர் நசரேன் பெர்னாட் மற்றும் கவிதா, தங்கலட்சுமி, தாமஸ் பெனிபர், பாரஸ்ராஜ், ஆரோக்கிய மகேஷ், ரமேஷ் குமார், ஆரோக்கிய மகேஷ், வர்க்கீஸ், கிரேட்டஸ் லியா உள்பட நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News