உள்ளூர் செய்திகள் (District)

மார்த்தாண்டம் அருகே தண்ணீரில் மூழ்கி மூதாட்டி சாவு

Published On 2022-09-19 08:01 GMT   |   Update On 2022-09-19 08:02 GMT
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
  • இவர், காலை திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திக்குட்பட்ட பகோடு பனம்பழஞ்சி விளையை சேர்ந்தவர் வல்சலா (வயது 68) மகன் வீட்டில் வசித்து வந்த இவர், காலை திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்த போது ஞாறான்விளை பகுதி ரெயில்வே லைன் அருகில் உள்ள வாய்க்காலில் மூழ்கி வல்சலா இறந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது மகன் கிரீஸ் மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News