உள்ளூர் செய்திகள்
கிறிஸ்துமஸ், பொங்கலையொட்டி 12-வது வட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் பொருட்களை வழங்கினர்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகர 12-வது வட்ட தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வட்ட செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளரும், வட்ட செயலாளருமான வேல்முருகன், கவுன்சிலர் கலாராணி, மகளிர் அணி செயலாளர் ஜெசிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பிரதிநிதி செல்வம் வரவேற்றார்.
விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், கன்னியாகுமரி பேரூராட்சி செயலாளரும், பேரூராட்சி தலைவருமான குமரி ஸ்டீபன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சிலதா ஆகியோர் சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் பொருட்களை வழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அனஜ பெருமாள் என்ற நாகராஜன் நன்றி கூறினார்.