உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் கொள்ளையர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

Published On 2022-06-18 07:05 GMT   |   Update On 2022-06-18 07:05 GMT
  • போலீசார் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
  • இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்தபோது பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்

நாகர்கோவில் :

ஆரல்வாய்மொழி அருகே வடக்கு பெருமாள்புரத்தில் மோட்டார் சைக்கிளை திருடி விட்டதாக கூறி இரண்டு வாலிபர்களை பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் வருவதில் தாமதம் ஏற்பட்ட தால் நாகர்கோவில் நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் பிடியில் இருந்த கொள்ளையர்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட இருவரி டமும் விசாரணை நடத்தியபோது அவர்கள் தடிக்காரன்கோ ணம் அண்ணா நகரை சேர்ந்த ஆகாஷ் என்பதும் மற்றொருவர் தடிக்கா ரன்கோணம் ரெத்தின புரத்தை சேர்ந்த ஜோசப் ராஜ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து தெற்கு பெருமாள் புரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆகாஷ், ஜோசப்ராஜ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஜோசப்ராஜ் புகார் மனு ஒன்று அளித்தார்.அதில் நானும்,ஆகாசும் வடக்கு பெருமாள்புரத்தில் சந்திரகுமார் என்பவரது இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்தபோது பொதுமக்கள் எங்களை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ள னர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இது தொடர்பாகவும் கண்டால் தெரியும் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News