உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே கேரளாவிற்கு ஆட்டோவில் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-07-09 07:38 GMT   |   Update On 2022-07-09 07:38 GMT
  • வட்டவழங்கல் அதிகாரி நடவடிக்கை
  • தப்பியோடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி:

களியக்காவிளை அருகே உள்ள சாமியார் மடம் பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ் குமார் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தே கத்துக்கிடமாக ஒரு ஆட்டோ வந்துள்ளது. அதனை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றார்.

இதனால் வட்ட வழங்கல் குழுவினர் ஆட்டோவை விரட்டிச் சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று சாங்கை பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

அரிசியை கைப்பற்றிய வட்ட வழங்கல் குழு, காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஓப்படைத்தது. மேலும் கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க ப்பட்டது. தப்பியோடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News