உள்ளூர் செய்திகள் (District)

கன்னியாகுமரியில் 4-வது நாளாக கடல் சீற்றம்

Published On 2022-07-03 09:02 GMT   |   Update On 2022-07-03 09:02 GMT
  • 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது
  • கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இன்று காலை 4-வது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துஉள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்" என்றுதாழ்ந்துஉள்வாங்கி காணப்பட்டது.

அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப் பட்டது.

இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்கவேண்டிய படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. விவேகானந்தர் மண்ட பத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற் கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்த ளிப்பாகவும் காணப்பட்டது.

கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் கடல் சீற்றம் சீரானதை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது.

Tags:    

Similar News