உள்ளூர் செய்திகள்
வெள்ளிமலை பேரூராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சமூக நலக்கூடம்
- பிரின்ஸ் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்
- வெள்ளிமலை பேரூராட்சி அம்மாண்டிவிளை இளையான்விளை பகுதியில் புதிய சமூக நலக்கூடம்
கன்னியாகுமரி :
குளச்சல் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளிமலை பேரூராட்சி அம்மாண்டிவிளை இளையான்விளை பகுதியில் புதிய சமூக நலக்கூடம் கட்டும் பணி தொடங்கியது.இந்த பணியை குளச்சல் எம்.எல்.ஏ.பிரின்ஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், செயல் அலுவலர் சிவகுமார், கவுன்சிலர் சிவ நளாயினி உள்பட ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.