உள்ளூர் செய்திகள்

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் - அ.தி.மு.க.வினருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வேண்டுகோள்

Published On 2022-11-09 07:17 GMT   |   Update On 2022-11-09 07:17 GMT
  • வாக்குச் சாவடிகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம்
  • புதிய வாக்களர் சேர்ப்பதில் எவருடைய பெயரும் விட்டு விடாத வகையில் அ.தி.மு.க.வினர் தனி கவனம் செலுத்த வேண்டும்

நாகர்கோவில் :

அ.தி.மு.க. அமைப்பு செய லாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுபடி 1-1-2023 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவ டைந்தவர்கள், 18 வயது நிறைவடைந்து இது வரை வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்க்காத வர்கள் 17 வயது பூர்த்தி யடைந்த இளம் வாக்கா ளர்கள் வாக்காளர் பட்டி யலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளும் வகையில் இன்று 9-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடக்க உள்ளது.

அதன்படி இம்மாதம் (நவம்பர்) 12-ந்தேதி சனிக்கிழமை, 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை 26-ந்தேதி சனிக்கிழமை, 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் வாக்க ளிக்க கூடிய வாக்குச் சாவடிகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமில் தகுதியான நபர்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ வழங்கியும், ஏற்கனவே வாக்காளர்களாக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வேறு தொகுதிக்கு மாற விரும்பினால் படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணெய் வாக்காளர் பட்டியல் என இணைத்திட படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க லாம்.

4 நாட்கள் நடக்கும் இச்சிறப்பு முகாம்களில் குமரி மாவட்டத்தை சார்ந்த ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பகுதிகளில் உள்ள 18 வயது நிரம்பிய வர்களையும், வாக்கா ளர் பட்டி யலில் இதுவரை பெயர் சேர்க்காத வரையும் அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இதில் புதிய வாக்களர் சேர்ப்பதில் எவருடைய பெயரும் விட்டு விடாத வகையில் அ.தி.மு.க.வினர் தனி கவனம் செலுத்த வேண்டும்

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News