உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் ஆசிரியர் மீது மாணவிகள் புகார்

Published On 2022-09-14 10:02 GMT   |   Update On 2022-09-14 10:02 GMT
  • கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • ஆசிரியர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன

நாகர்கோவில்:

நாகர்கோவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இரணியல் அரசு பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து புகார் மனு அளித்தனர். அதில், நாங்கள் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறோம்.

எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் அருவரு க்கத்தக்க வகையிலான வார்த்தைகள் பேசி வரு கிறார். மேலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளை இணைத்து தவறாக பேசி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆசிரியர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன என கூறியிருந்தனர்.

இது தொடர்பான மனுவை மாவட்ட கல்வி அதிகாரிக்கும் அளித்து உள்ளனர். கல்வித் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியர் மீது மாணவிகள் செக்ஸ் புகார் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News