உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

குமரியில் 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.14 கோடிக்கு மது விற்பனை

Published On 2022-10-25 08:11 GMT   |   Update On 2022-10-25 08:11 GMT
  • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக விற்றது
  • தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 111 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த கடைகளில் ரூ.2 கோடி முதல் ரூ.2½ கோடி வரை தினமும் மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. பண்டிகை காலங்களில் விற்பனை அதிகமாக நடைபெறும்.

தீபாவளி பண்டி கையையொட்டி கடந்த 3 நாட்களாக டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுபான பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.பீர் வகைகள் மதுபான வகைகள் அதிக அளவு விற்பனையாகி உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகளவு மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளன. 23-ந் தேதி ரூ.5 கோடியே 50 லட்சத்திற்கு மது பானங்கள் விற்று தீர்ந்து உள்ளது. கடந்த 22-ந் தேதி ரூ.4 கோடியே 75 லட்சத்திற்கும்,

24-ந்தேதி ரூ.3 கோடியே 75 லட்சத்திற்கு என மொத்தம் 3 நாட்களில் ரூ.14 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

இந்த ஆண்டு விற்ப னையை பொருத்தமட்டில் கடந்த ஆண்டு விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News