உள்ளூர் செய்திகள் (District)

ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2023-08-26 07:34 GMT   |   Update On 2023-08-26 07:34 GMT
  • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
  • வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாகர்கோவில் :

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதற்கு தடைவிதிக்க மறுத்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பினை வரவேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியா குமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த தீர்ப்பை வரவேற்று நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பஸ்களில் பயணித்த பயணி களுக்கு பஸ்சில் ஏறி இனிப்புகளை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்.இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தீர்ப்பினை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினிபகவதியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாநகராட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News