மார்த்தாண்டம், குழித்துறை பகுதியில் நாளை மின்தடை
- குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அறிவிப்பு
- காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் நாளை (23-ந் தேதி) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் விரிகோடு, மாமூட்டுக்கடை, நெட்டி யான்விளை, காட்டவிளை, மஞ்சக்குளம், கரைக்காடு, பரக்குன்று, சாத்தன்கோடு, துவரச்சன்விளை,
வாழ்வச்சான்பாறை, மூடோடு, சாண்டிபாறை, செழுவன்சேரி, தூப்புர மூலை, மணப்பழஞ்சி, நுள்ளிக்காடு, அயக் கோட்டிவிளை, மடத்து விளை, மாங்கோடு, காளை விழுந்தான்கோயில், ஐந்துளி, மருதம்பாறை, பத்துகாணி, ஆறுகாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை (23-ந் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.