உள்ளூர் செய்திகள்

குமரி அணை பகுதிகளில் பரவலாக மழை

Published On 2023-10-10 07:19 GMT   |   Update On 2023-10-10 07:19 GMT
  • மாம்பழத்துறையாறில் 32.5 மில்லி மீட்டர் பதிவு
  • மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பாசன குளங் கள், அணைகளின் நீர்மட் டம் கணிசமான அளவு உயர்ந்தது.

கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று அணை பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு, மாம்ப ழத்துறையாறு அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மாம்பழத் துறையாறில் அதிகபட்சமாக 32.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. களியல், கன்னிமார், ஆணைக்கிடங்கு, சுருளோடு பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது.

இதையடுத்து அணை களுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 607 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 34.33 அடியாக இருந்தது.

அணைக்கு 642 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 277 கன அடி தண்ணீர் வெளியிடப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.35 அடியாக உள்ளது. அணைக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 130 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 14.63 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 14.73 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 35.27 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் இன்று காலை 16 அடியை எட்டியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை 12.2, பெருஞ்சாணி 32.4, சிற்றார் 1-3.4, சிற்றார் 2-19, களியல் 8.2, கன்னிமார் 1.2, புத்தன் அணை 30, சுருளோடு 16.4, பாலமோர் 19.4, மாம்பழத்து றையாறு 32.5, திற்பரப்பு 8.4, ஆணைக்கிடங்கு 30.2.

Tags:    

Similar News