உள்ளூர் செய்திகள் (District)

திருவட்டார் அருகே ராணுவ வீரரின் மனைவி - 2 மகள்கள் மாயம்

Published On 2022-06-22 07:30 GMT   |   Update On 2022-06-22 07:30 GMT
  • திருவட்டார் அருகே உள்ள தச்சூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர்.
  • திருவட்டார் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே உள்ள தச்சூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் சுனில்ராஜ், மத்திய பாது காப்பு படை வீரர்.

இவரது மனைவி லில்லிஜாய் (வயது 40). இவர்களது மகள்கள் ஷானியா (15) ஷம்ளா (12). சுனில்ராஜ் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு 6-ந் தேதி வேலைக்கு சென்றார்.மறுநாள் மதியம் மனைவிக்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. வீட்டின் அருகில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது 6-ம் தேதி மாலையில் லில்லிஜாய், மகள்களுடன் வெளியே போனதாக தெரிவித்தனர்.

இதனால் கடந்த 18-ந் தேதி மீண்டும் ஊருக்கு வந்த சுனில்ராஜ் பல்வேறு இடங்களில் மனைவி மற்றும் மகள்களை தேடினார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருவட்டார் போலீஸ் நிலையத்தில் சுனில்ராஜ் புகார் கொடுத்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News