உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே தோழி வீட்டில் நகை திருடிய பெண் கைது

Published On 2023-02-16 07:16 GMT   |   Update On 2023-02-16 07:16 GMT
  • பீரோவில் இருந்த சுமார் 18 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு காணவில்லை.
  • தோழிகள் இருவருக்கும் போன் செய்துள்ளார். ஆனால் அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆப்

கன்னியாகுமரி:

இரணியல் அருகே உள்ள காரங்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் சுதா (வயது 50). இவருக்கு குருந்தன்கோடு சேர்ந்த ஜெயலட்சுமி (22) மற்றும் ஜெயராணி (20) ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயலட்சுமி, ஜெய ராணியும் ஜாஸ்மின் சுதா வீட்டில் தங்கி உள்ளனர். அப்போது ஜாஸ்மின் சுதா வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் அவரது நண்பர்கள் இருவரும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜாஸ்மின் சுதா பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்பொழுது பீரோவில் இருந்த சுமார் 18 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை காணவில்லை. இதையடுத்து தோழிகள் இருவருக்கும் போன் செய்துள்ளார். ஆனால் அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதையடுத்து குறுந்தன் கோட்டில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார் அங்கு அவர்கள் இல்லை

இது குறித்து ஜாஸ்மின் சுதா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயலெட்சுமியை கைது செய்தனர். தோழி வீட்டிலேயே நகையை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News