உள்ளூர் செய்திகள்
- கணவர் போலீசில் புகார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி அருகே கல்படி சடையன்விளையை சேர்ந்தவர் ரத்தினகுமார், பெயிண்டர். இவரது மனைவி அபிராமி (வயது 33). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உண்டு. மகன் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 12 ந் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ரத்தினகுமார் வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் உறவினர்கள் மற்றும் அபிராமியின் பெற்றோர் வீட்டில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ரத்தினகுமார் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.