உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே தூக்குப் போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2022-07-12 07:12 GMT   |   Update On 2022-07-12 07:12 GMT
  • நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் மெது கும்மல் பகுதியை சேர்ந்த வர் ராஜன், தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர்.

மெதுகும்மல் பகுதியில் வசித்து வந்த ராஜன் கடந்த சில மாத காலமாக நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் சென்னை யில் வசிக்கும் ராஜனின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. எனவே மகள் மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக ராஜனின் மனைவி சென்னை சென்று உள்ளார்.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜன் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். காலையில் வேலைக்கு செல்வதற்கு பக்கத்தில் உள்ளவர்கள் ராஜன் வீட்டில் வந்து கூப்பிட்டுள்ளனர்.

ராஜனிடம் இருந்து எந்த பதிலும் வராததினால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் தூக்கீல் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

இது குறித்து களியக்கா விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை க்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News