உள்ளூர் செய்திகள்

பூதப்பாண்டி அருகே விபத்தில் தொழிலாளி சாவு

Published On 2023-07-11 06:30 GMT   |   Update On 2023-07-11 06:30 GMT
  • மோட்டார் சைக்கிளில் உச்சம் பாறையிலிருந்து துவரங்காட்டிற்கு சென்றார்
  • பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது

நாகர்கோவில் :

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஆண்டித்தோப்பு உச்சம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 62), தொழிலாளி.

இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் உச்சம் பாறையிலிருந்து துவரங்காட்டிற்கு சென்றார். அப்போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெருமாள், பலத்த காயம் அடைந்தார்.

சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி காரை ஒட்டி வந்த திடல் ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News