உள்ளூர் செய்திகள்

குழித்துறையில் அரசு பஸ் மோதி வாலிபர் படுகாயம்

Published On 2022-09-21 09:44 GMT   |   Update On 2022-09-21 09:44 GMT
  • டிரைவர் தாக்கப்பட்டதாக கூறி போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
  • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் காஞ்சாம்புறம் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த சாமு வேல் (வயது 25), தனது மனைவி அபிதா(20) வுடன் மார்த்தாண்டம் மார்க்கெ ட்டுக்கு பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றார்.மார்க்கெட் பகுதியில் சென்ற போது, அப்பகுதி யில் சென்ற அரசு பஸ் சாமுவேலின் இருசக்கர வாகனத்தில் மோதியது.இந்த விபத்தில் சாமு வேலின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைய டுத்து சாமுவேல், பஸ் டிரைவருடன் வாக்கு வாதம் செய்தார். அப்போது சாமுவேல் மற்றும் அவரது மனைவிக்கு பஸ் டிரைவர் கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படுகாய மடைந்த சாமுவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர்.இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு அணுகோடு பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் (55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் டிரைவர் ஏசுதாஸ், தான் தாக்கப்பட்டதாகவும், இதனால், குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் டிரைவர் ஏசுதாசுக்கு ஆதரவாக குழித்துறை பணிமனை சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பணி யாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News