உள்ளூர் செய்திகள் (District)

அலங்கார மீன்வளர்ப்பு திட்டங்களுக்கு மானியம்

Published On 2022-08-24 10:19 GMT   |   Update On 2022-08-24 10:19 GMT
  • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
  • விண்ணப்பங்கள் மூப்பு நிலை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மீன் வளர்ப்பினை மேம்படுத் திட 2021-22ம் ஆண்டிற்கு ரூ.186.35 கோடி மதிப்பி லான திட்டங்களுக்கு மத்திய அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட் டத்திற்கு கீழ்காணும் திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கொல்லைப்புற அலங் கார மீன் வளர்ப்பு அலகு (கடல் நீர் மற்றும் நன்னீர்) ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் (ரூ.1.20 லட் சம்) ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு 60 சதவீத மானியமும் (ரூ.1.80 லட் சம்) வழங்கப்பட உள்ளது.

அலங்கார மீன் வளர்ப்பு நடுத்தர அலகு கடல் நீர் மற்றும் நன்னீர் ரூ.8 லட் சம் மதிப்பீட்டில் அமைத் தல் திட்டத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியமாக ரூ.3.20 லட்ச மும். ஆதி திராவிடர் மற் றும் பழங்குடியினருக்கு 60 சதவீத மானியமாக ரூ.4.80 லட்சமும் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.

எனவே இத்திட்டங் களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் நாகர்கோவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவல கம், டிஸ்டிலரி ரோடு வடசேரி-629001, தொலை பேசி 04652 227460 ஐ தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மூப்பு நிலை மற்றும் முன்னு ரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய் யப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News