உள்ளூர் செய்திகள் (District)

வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2023-03-13 07:39 GMT   |   Update On 2023-03-13 07:53 GMT
இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபரீதம்

கரூர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வேலஞ்செட்டியூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). தனியார் நிறுவன காவலரான இவர், சம்பவத்தன்று மாலை, அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில், அரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில், தலையில் காயம டைந்த நாகராஜன், அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News