உள்ளூர் செய்திகள் (District)

வாலிபரிடம் தகராறு செய்த 5 பேர் கைது

Published On 2023-05-09 05:27 GMT   |   Update On 2023-05-09 05:27 GMT
  • வாலிபரிடம் தகராறு செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்
  • மது அருந்திய போது நடந்த சம்பவம்

கரூர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மணல் மேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், (வயது 38) கூலி தொழிலாளி. இவர், அரவக்குறிச்சி அருகே டெக்ஸ் பார்க் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது கவுதம் (26), பிரவின் (26), ராகுல் (23), ஜீவானந்தம் (20), சுதர்சன் (21) ஆகிய 5 பேர், சக்திவேலுவிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார், வழக்கு பதிவு செய்து அந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News