உள்ளூர் செய்திகள் (District)

வாகன விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-03-01 10:20 GMT   |   Update On 2023-03-01 10:20 GMT
  • இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியவருக்கு நேர்ந்த பரிதாபம்
  • வோலாயுதம் பாளையம் போலீசார விசாரணை

கரூர்,

கரூர் மாவட்டம் அத்திப்பாளையம் செல்வநகரை சேர்ந்தவர் ரஜினி (வயது 31). இவர் நண்பர்கள் சதீஷ்குமார், சுப்பிரமணி ஆகியோருடன் குருநாதன் கோயிலுக்கு சென்று விட்டு பசுபதி பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பண்டுதகாரன்புதுார் பிரிவு அருகே வந்த போது பின்னால் வந்த வாகனம் இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ரஜினியை மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரஜினி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளை யம் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News