உள்ளூர் செய்திகள் (District)

மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2023-02-23 09:16 GMT   |   Update On 2023-02-23 09:16 GMT
  • மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்
  • இதுகுறித்து வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர்:

கரூர் மாவட்டம், துளசிகொடும்பு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27) தனியார் நிறுவன ஊழியர். இவர், தனது டூவீலரில் வெள்ளியணை அருகே, தாளியாப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். தனியார் சிமென்ட் ஆலையின் ரயில்வே இருப்பு பாதை பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில், படுகாயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு மதுப்பிரியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News