உள்ளூர் செய்திகள்
- அரசு பள்ளி மாணவியர் சிறப்பிடம்
- சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
கரூர்,
கரூர் பாலிடெக்னிக் கல்லுாரியில் விரைவு சதுரங்கப் போட்டி நடந்தது. இதில், அரவக்குறிச்சியைச் சேர்ந்த, 27 பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 9, 11, 13 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் அரவக்குறிச்சி மாண வியர் சிறப்பிடம் பெற்றனர். இதையடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவியர், அவர்களின் பயிற்சியாளர்கள் வீரமலை, நாகலட்சுமி ஆகியோரை ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.