உள்ளூர் செய்திகள் (District)

பள்ளியில் குழந்தைகள் தின விழா

Published On 2022-11-18 09:25 GMT   |   Update On 2022-11-18 09:25 GMT
  • பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது
  • வட்டார கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்

கரூர்:

கரூர் கொளந்தா கவுண்டனூர் பள்ளியில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர் மணிமாலா தலைமை வகித்து பரிசுகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி உறுப்பினர் அருள்மணி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா வரவேற்றார். மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி உதவி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News