உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம்

Published On 2022-10-09 06:53 GMT   |   Update On 2022-10-09 06:53 GMT
  • கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்
  • 11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில்

கரூர்:

11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், வரும் 19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க, கரூர் மாவட்ட செயலாளர் கதிரவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தொடக்க கூட்டுறவு வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, வழங்க வேண்டிய ஓய்வு கால நிதி பயன்களை உடன டியாக வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பில் உள்ள செயலாளர்களை, அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பன 11 உள் அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சங்கம் சார்பில், வரும் 19ம் தேதி இதுகுறித்து, அவர் வெளி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News