உள்ளூர் செய்திகள் (District)
கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் சாதனை
- கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்
- ஜூடோ போட்டிகள்
கரூர்
மாநில அளவிலான ஜூனியர் ஜூடோ போட்டியில், கரூர் அரசு கலை கல்லுாரி மாணவர் தங்கப்பதக்கம் வென்றார். தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில், மாநில அளவிலான ஜூடோ போட்டிகள், திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இதில், கரூர் அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்.சி., தாவரவியல், இரண்டாமாண்டு படித்து வரும் மாணவர் ஜெய்தரன், முதலிடம் பிடித்து தங்கப்ப தக்கம் வென்றார்.வெற்றி பெற்ற மாணவர் ஜெய்தரனை, கல்லுாரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற் கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்டினர்.