உள்ளூர் செய்திகள் (District)
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்
- ளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
கரூர்,
குளித்தலை அருகே, மருதுார் பஸ் ஸ்டாப் பகுதியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 70 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த கார், அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அங் கிருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. மருதுார் வி.ஏ.ஒ., அலிமா, கொடுத்த புகாரின் படி, குளித்தலை போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.