உள்ளூர் செய்திகள் (District)
மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீஷியன் பலி
- எதிர்பாராத விபத்து
- போலீசார் விசாரணை
கரூர்
வெங்கமேட்டை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 27). எலக்ட்ரீஷியன். இவர் வேலாயுதம்பாளையம் அருகே காரிப்பாளையத்தில், விநாயகர் கோவிலில் ஸ்பீக்கர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நவீன்குமாரின் தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.