உள்ளூர் செய்திகள் (District)
- மயங்கி விழுந்த ஊழியர் உயிரிழந்தார்
- பணிபுரிந்து கொண்டிருந்த போது சம்பவம்
கரூர்:
சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி கலிங்கா சாலையை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ் குமார் (வயது 42) இவர், கரூர் ஆண்டாங்கோவிலில் உள்ள, தனியார் கம்ப்யூட்டர் நிறு வனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் குமார், தான் வேலை செய்து வந்த நிறுவ னத்தில் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரமேஷ் குமாரின் மனைவி ஜெனிக் பிரேம் குமாரி கொடுத்த புகாரின் படி, கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.