உள்ளூர் செய்திகள் (District)
நீரில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு
- மாயனூர் கதவணை அருகில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
- தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்ட போலீசார்
கரூர்,
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சின்னசேங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் முகேஷ் (வயது 22). இவர் கரூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர், மாயனுார் காவிரி கதவணை அருகில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நிலையில் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து ெசன்று முகேஷின் உடலை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.