உள்ளூர் செய்திகள் (District)

மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி சாவு

Published On 2022-10-10 08:53 GMT   |   Update On 2022-10-10 08:53 GMT
  • மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி பரிதாபமாக இறந்தார்.
  • வழுக்கி விழுந்து மின்சாரம் தாக்கி அலறி துடித்தார்.

கரூர்

கரூர் மாவட்டம், புஞ்சை புகழூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 81). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி சுந்தரி (69). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சோமசுந்தரம்-சுந்தரி தம்பதி கரூர் மாவட்டம் புஞ்சை புகழூர் முதலியார் தெருவில் உள்ள பூர்வீக வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் அங்குள்ள வீட்டில் எலக்ட்ரிக் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சுந்தரி யு.பி.எஸ்.-ல் சவுண்ட் வருகிறது என்று கூறி அதை அணைக்க நடந்து சென்ற போது தரையில் கிடந்த எலக்ட்ரிக் வயரில் திடீரென வழுக்கி விழுந்து மின்சாரம் தாக்கி அலறி துடித்தார்.

இதனைக்கண்ட சோமசுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் ஓடி வந்து மின்சாரத்தை நிறுத்தி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சுந்தரியை சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சோமசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News