உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணராயபுரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி்

Published On 2023-05-08 06:45 GMT   |   Update On 2023-05-08 06:45 GMT
  • கிருஷ்ணராயபுரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி் அடைந்துள்ளனர்
  • வெற்றிலை, வாழை ஆகியவைகளுக்கு மழை நீர் கிடைத்து பசுமையாக வளர்ந்து வருகிறது

கரூர்:

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், மணவாசி, மகாதானபுரம், லாலாப்பேட்டை, வல்லம், கொம்பாடிப்பட்டி, சரவணபுரம், வயலுார், பஞ்சப்பட்டி, சிவாயம், வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கரும்பு, சோளம், மரவள்ளிக்கிழங்கு, வெற்றிலை, வாழை ஆகியவைகளுக்கு மழை நீர் கிடைத்து பசுமையாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பூமி குளிர்ச்சி அடைந்து வெப்பம் தணிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News