உள்ளூர் செய்திகள் (District)
- லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- உடலை மீட்டு போலீசார் விசாரணை
கரூர்:
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை இந்திராகாலனியை சேர்ந்தவர் கணேசன், (வயது 55). லாரி டிரைவர். சம்பவத்தன்று இரவு இவர், காரைக்குடியில் இருந்து தைல மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு, சின்னரெட்டிப் பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் தைலமரக்கட்டைகளை இறக்கிவிட்டு, அதிகாலையில் க ாகித ஆலைக்கு வெளியே வந்தார். பின்னர் லாரியை சாலையோரம் ஒரு இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு உறங்கிவிட்டார்.
இதையடுத்து மற்றொரு டிரைவரான ஜெயராஜ் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது லாரியின் உள்பகுதியில் கணேசன் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், இது குறித்து தோகைமலை போலீசில்
புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.