உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணராயபுரத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது

Published On 2023-04-06 08:14 GMT   |   Update On 2023-04-06 08:14 GMT
  • கரூர் கிருஷ்ணராயபுரத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது
  • மாம்பழ சீசன் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்ப்பு

கரூர்,

கிருஷ்ணராயபுரம் பகுதியில், மாம்பழம் சீசன் துவங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன் றியத்திற்கு உட்பட்ட சிந்தலவாடி, மகாதானபுரம், திருக்காம்புலியூர், மாயனுார், கட்டளை, சேங்கல், லாலாப்பேட்டை ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக மாமரம் சாகு படி செய்து வருகின்றனர். இந்த மா மரத்தில் தற்போது பூக்கள் பூத்து, மாங்காய்கள் காய்த்து வருகின்றன.மேலும் மாம்பழம் சீசன் துவங்கி உள் ளதால், முதிர்ந்த மாங்காய்களை விவசாயிகள் பறித்து விற்பனை கொண்டு வந்து ஒரு கிலோ, 60 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் வரும் நாட்களில் மாம் பழம் சீசன் மேலும் தீவிரமடையும். இதில் செந்தூரா மற்றும் இதர ரக மாம்பழங்கள் விற் பனைக்கு வந்து விடும். சீசன் காரணமாக மா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.

Tags:    

Similar News