உள்ளூர் செய்திகள்
- கடந்த ஓராண்டாக பாதுகாப்பின்றி சுற்றி திரிந்தவர் மீட்பு
- தனியார் மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு
கரூர்,
அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கடந்த ஓராண்டாக, பாதுகாப்பின்றி சுற்றித்திரிவ தாகவும், அவரை மீட்டு, மன நல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க கோரி, சமூக ஆர்வலர்கள் அரவக்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், குளித் தலை அருகே, சாந்தி வனம் மனநல காப்பகத்தினரை போலீசார் தொடர்பு கொண்டு, அந்த பெண்ணை மீட்டு, மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, சாந்திவனம் மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, டிரைவர் வேல்மு. ருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈசநத்தம் சென்று அந்த பெண்ணை மீட்டு, திருச்சியில் ள்ள தனியார் மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.