உள்ளூர் செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றம்

Published On 2023-03-12 06:58 GMT   |   Update On 2023-03-12 06:58 GMT
  • 30 வழக்குகள் சமரசம்
  • பலருக்கு இழப்பீடாக ரூ.1.63 கோடி பெற்றுத்தரப்பட்டது

குளித்தலை, 

குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குளித்தலை வட்ட சட்டம் பணிகள் குழு நடத்தும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சார்பு நீதிபதி சண்முககனி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நலம், வாகன விபத்துக்கள் இழப்பீடு வழக்கு, என நிலுவையில் உள்ள 100க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்டு இதில் 30 மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு வழக்குகளுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் சமரசம் பேசி முடித்து வைக்கப்பட்டது. இதில் இழப்பீட்டு தொகையாக 1 கோடியே 63 லட்சத்து 33 ஆயிரம் ருபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்று தரப்பட்டது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், நிகில்அரவிந்த், மதியழகன், செந்தில்குமார், அரசகுமார், திராவிடமணி மற்றும் வழக்கறிஞர்கள், காப்பீடு நிறுவன அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News