என்.எஸ்.எஸ். மாணவர்களின் உழவாரப்பணிகள்
- என்.எஸ்.எஸ். மாணவர்களின் உழவாரப்பணிகள் நடைபெற்றது
- குளித்தலை அரசு மருத்துவமனை வளாகத்தில்
கரூர்:
குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏழு நாள் சமூக பணிகள் செய்வதற்காக சிறப்பு முகாம் துவக்க விழா எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று குளித்தலை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முட்புதர்களையும் தூய்மை செய்வதற்காக உழவாரப்பணிகளை நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் செய்தனர். உழவாரப் பணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பூமிநாதன் தொடங்கி வைத்தார், தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் சிலரும் உழவாரப் பணியில் கலந்து கொண்டனர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், உதவி தலைமை ஆசிரியர் ரவி, என்.எஸ் .எஸ் அலுவலர் லட்சுமணன், முகாம் பொறுப்பாளர்கள் ரமேஷ்குமார், மாரியப்பன், ஆனந்த், நம்பிக்கை மைய ஆலோசகர் சுஜாதா, மனநல ஆலோசகர் மகேஷ்வரி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள், மாணவர்கள், கலந்து கொண்டனர்.