உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி முதியவர் படுகாயம்

Published On 2023-04-14 06:52 GMT   |   Update On 2023-04-14 06:52 GMT
  • வாகனம் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.
  • நடந்து சென்ற போது சம்பவம்

கரூர் :

கரூர் தளவாபாளையம் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி முத்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 65). இவர் தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மாணிக்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் விபத்து ஏற்படுத்திய செல்வராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News