உள்ளூர் செய்திகள் (District)

பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி

Published On 2023-02-20 09:31 GMT   |   Update On 2023-02-20 09:31 GMT
எதிர்பாராத விதமாக விபத்து

குளித்தலையை அடுத்த, வரவணையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25), லாரி டிரைவர். இவரது தந்தை மணி (55). இவர் தனது இருசக்கர வாகனத்தில் உடையாப்பட்டி -சேங்கல் நெடுஞ்சாலையில், தண்ணீர்பட்டி பிரிவு பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மணி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News