உள்ளூர் செய்திகள் (District)
- அடையாளம் தெரியாத முதியவர் சாவு
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
கரூர்,
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, சொக்க தேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35). அரசு பஸ் டிரைவர். இவர், அரவக்குறிச்சி அருகே மேட்டுப்பட்டி பிரிவு பகுதி வழியாக, கரூரில் இருந்து, திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது, சாலையின் குறுக்கே சென்ற, 50 வயது மதிக்கத்தக்க அடை யாளம் தெரியாத ஆண் ஒருவர், திடீரென குறுக்கே வந்தார். அவர் மீது பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, வேலம்பட்டி வி.ஏ.ஓ., நீலமேகம் கொடுத்த புகாரின்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.