உள்ளூர் செய்திகள் (District)
- இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்து
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்
கரூர்,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் திவாகர் (வயது 19). கூலி தொழிலாளியான இவர், கடவூரில் தேரோட்ட நிகழ்ச்சிக்கு, தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருமலைராயபுரம் காலனி அருகே சென்றபோது, கடவூரிலிருந்து இருந்து நாச்சிமுத்து வந்த இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு திவாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திவாகரின் தாய் தேவி, கொடுத்த புகாரின்படி பாலவிடுதி போலீசார், நாச்சிமுத்து மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.