உள்ளூர் செய்திகள் (District)
கரூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒருவர் பலி
- கரூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒருவர் பலியானார்
- போலீசார் லாரி டிரைவர் ராமசாமி மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், க.பரமத்தி என். நல்ல ப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சுதா (வயது 42) இவர் டி.வி.எஸ்., மொபட்டில் க.பரமத்தி - என்.நல்லப் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தென்னிலை பகுதியை சேர்ந்த ராமசாமி (40) ஓட்டி சென்ற டாரஸ் லாரி, மொபட் மீது மோதியது. அதில், கீழே விழுந்த சுதா, தலையில் அடிப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.இதையடுத்து, சுதாவின் கணவர் சுப்பிரமணி கொடுத்த புகா ரின் பேரில், க.பரமத்தி போலீசார், டாரஸ் லாரி டிரைவர் ராமசாமி மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.