உள்ளூர் செய்திகள்

வாய்க்காலில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

Published On 2022-10-28 06:47 GMT   |   Update On 2022-10-28 06:47 GMT
  • வாய்க்காலில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
  • போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்

கரூர்:

கரூரில் இருந்து கோவை மற்றும் ஈரோடு செல்லும் சாலையில் திருக்காம் மியூர் பிரதான வாய்க்கால் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இதில் அதிகளவு கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவு நீர் தேக்கத்தால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News